Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

கடன் பிரச்சினை: தாய், மகன் தற்கொலை

திருச்சி திருவானைக்காவல் கணபதி நகர் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி செல்லம்மாள் (65). இவரது மகன் ரமேஷ்பாபு(41). இவரது மனைவி இலக்கியா(25). இத்தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக தனது மனைவி மற்றும் குழந்தையை மாமனார் வீட்டுக்கு அனுப்பிய ரமேஷ்பாபு தனது வீட்டில் தாயுடன் வசித்து வந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ரமேஷ்பாபு, செல்லம்மாள் ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர்.

தகவலறிந்த ரங்கம் போலீஸார் அங்கு சென்று உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x