Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை விழா தொடக்கம்

கும்பகோணம்: முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாக திகழும் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நவ.23, 24 ஆகிய தேதிகளில்(நாளையும், நாளை மறுநாளும்) ஊஞ்சல் உற்சவம், நவ.25, 26 தேதிகளில் சுவாமி உள்பிரகார புறப்பாடு ஆகியவை நடைபெற உள்ளன. நவ.29-ம் தேதி திருக்கார்த்திகை அன்று காலை சிறப்பு வழிபாடு, இரவு 8 மணிக்கு தீபக்காட்சி, அதைத் தொடர்ந்து சுவாமி புறப்பாடு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. கரோனா ஊரடங்கு காரணமாக, நவ.29-ம் தேதி காலை கார்த்திகை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக கோயில் உள் பிரகாரத்தில் சிறிய ரதம் புறப்பாடு நடைபெறும். இதற்கிடையே, கந்தசஷ்டி விழாவின் ஒருபகுதியாக நேற்று மாலை கோயிலின் வசந்த மண்டபத்தில் சண்முக சுவாமி, வள்ளி- தேவசேனா திருக்கல்யாணம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x