Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான், மாவட்டச் செயலாளர் இக்பால், மாவட்ட பொருளாளர் செய்யது இப்ராஹிம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு மாவட்டம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் களப்பணியாற்றுவது, கடையநல்லூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதால், மீண்டும் இந்த தொகுதியை கூட்டணி தலைமையிடம் பெற மாநிலத் தலைமையை கேட்டு க்கொள்வது, முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ மீண்டும் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ கூறும்போது, “தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x