Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய வாக்காளர்கள் ஆர்வம்

வாக்குச் சாவடி மையங்களில் நேற்றும், இன்றும், அடுத்த மாதம் 12, 13-ம் தேதிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 1,475 வாக்குச் சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற் றது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, பெயர், முகவரி மற்றும் புகைப்பட விவரங்களை திருத்தம் செய்ய ஏராளமானோர் நேற்று மனு அளித்தனர். அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்ற முகாமை ஆட்சி யர் விஷ்ணு பார்வையிட்டார்.

தென்காசி மாவட்டத்தில் 1,504 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற் றது. தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,694 வாக்குச் சாவடிகளில் முகாம் நடைபெற்றது. ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் உள்ள 1,603 வாக்குச் சாவடிகளில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இளைஞர்கள் ஆர்வமுடன் மனு அளித்தனர்.

மேலும், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக் கும் சிலர் விண்ணப்பம் செய்தனர்.

இந்த பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தில் 1,603 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 871 நியமன அலுவலர்கள், 159 மேற்பார் வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x