Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இன்று தேர்தல்

சென்னை

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. சென்னை, அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் முடிவு நாளை அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள், வழக்குகளை சந்தித்து வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிழக அரசின் சார்பில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டு நிர்வகித்து வந்தனர்.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் உள்ள நிர்வாகிகள் யாரும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் பி.எல்.தேனப்பன் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.

மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடவுள்ளனர். இதற்கு முந்தைய தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை வாக்கு எண்ணிக்கை, தேர்தல் நடைபெற்ற அடுத்த நாள் (நவ. 23) காலையில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x