Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 9-ம் தேதி ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 9-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ஓய்வூதியர் இயக்குநரக அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.
எனவே, மாவட்டத்தில் உள்ள ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதியம், பணிக்கொடை, இதர ஓய்வூதிய பலன்கள் தொடர்பாக இரட்டை பிரதிகள் கொண்ட மனுவை மாவட்ட ஆட்சியருக்கு வரும் 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT