Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM
வேலூர்: வேலூரில் தனியார் மருத்துவமனையில் டெங்கு கொசுப்புழு வளர்ந்திருந்ததால், கட்டுமான ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூரில் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு கொசுப்புழு குறித்த ஆய்வில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள அடுக்குமாடி கட்டிடம் கட்டுமான இடங்களில் ஆய்வு செய்தபோது 2 இடங்களில் டெங்கு கொசுப்புழு வளர்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கட்டுமான பணியின் ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் ஆய்வு நடத்த வரும்போது, கொசுப்புழு வளர்ந்திருந்தால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT