Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM
வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 957- ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 100-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,143-ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,449-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து, இதுவரை 17,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 210 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 271 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT