Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

கோயம்பேட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கடந்த 2 வாரங்களாக சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோ ரூ.50 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.

தக்காளி விலை மீண்டும் உயர்ந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, "கடந்த வாரம் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. அதன் காரணமாக தற்போது தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற தக்காளி அதிகம் விளையும் தமிழக பகுதிகளில் தக்காளி பயிர்கள் அழிந்து விளைச்சல் குறைந்து, வரத்தும் குறைந்துவிட்டது. அதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x