Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

இமாச்சலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த கிராமம்

மணாலி: இமாச்சலபிரதேசத்தில் மக்கள் தொகை விகித அடிப்படையில் கரோனா வைரஸுக்கு மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக லகுவால் ஸ்பிதி உள்ளது. இதன் காரணமாக லகுவால் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. ரோத்தங் குகைச் சாலைக்கு அப்பால் உள்ள கிராமங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, லகுவால் பள்ளத்தாக்கில் மணாலி – லே நெடுஞ்சாலையில் உள்ள தோரங் கிராமத்தில் தற்போது 42 பேர் மட்டுமே வசிக்கின்றனர். மற்றவர்கள் குளிர்காலம் கருதி குல்லு பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டனர். தோரங் கிராமத்தில் உள்ள 42 பேரும் தாமாக முன்வந்து சில நாட்களுக்கு முன் கரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 52 வயது பூஷண் தாக்கூர் என்பவரைத் தவிர மற்ற அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

இக்கிராம மக்கள் சில நாட்களுக்கு முன் மத நிகழ்ச்சிக்காக ஓரிடத்தில் கூடியுள்ளனர். அதுவே அனைவருக்கும் தொற்று ஏற்பட காரணமாகக் கூறப்படுகிறது. சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x