Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM
திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில், ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), சுங்கத் துறை, அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், திருவனந்தபுரம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் பேசியதாக, 'ஆடியோ' ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது. அதில், இந்த வழக்கில், முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறும்படி, அமலாக்கத் துறையினர் நெருக்கடி கொடுப்பதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார். இந்த ஆடியோ தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆடியோ எப்படி கசிந்தது என்பது குறித்து விசாரணை நடத்த சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் உத்தரவிட்டுள்ளார். சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT