Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

ஏழுமலையானுக்கு ரூ. 1 கோடியில் கார் காணிக்கை

திருமலை

திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று மாலை கர்நாடக மாநில சமூக நலத்துறை அமைச்சர் ராமுலு சார்பில் அவரது உதவியாளர் மஞ்சுநாத் ரூ.1.2 கோடி மதிப்பிலான சொகுசு காரைகாணிக்கையாக வழங்கினர்.

முன்னதாக, கோயில் முன்புகாருக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதற்கான சாவி திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கப்பட்டது.  வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சார்பில் இந்த சொகுசு கார் திருப்பதி ஏழுமலையான் மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்களுக்கு சம்பந் தப்பட்ட சேவைகளுக்கும், தர்மபிரச்சாரத்திற்கும் பயன்படுத்தப் படும் என தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x