Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
திருப்பூர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கிய அன்பரசு. தனியார் பிரிண்டர்ஸ் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்த இவர், கடந்த மாதம் 12-ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீஸார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அண்ணமார்பட்டியைச் சேர்ந்தவரும், அங்கேரிபாளையத்தில் தங்கி வசித்து வந்தவருமானஆர்.இளம்பரிதி (26), திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த எஸ்.ஆனந்த் (எ) சங்கர் (30) ஆகியோரை கைது செய்தனர்.
இதில், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் இளம்பரிதி மீது ஏற்கெனவே அடிதடி வழக்கும், சங்கர் மீது ஒரு கொலை வழக்கும் உள்ளது. இருவரும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையர் க.கார்த்திகேயன் நேற்று உத்தரவிட்டார். உத்தரவுக்கான நகல்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் அளிக்கப்பட்டன. மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நடப்பாண்டில் இதுவரை 41 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT