Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

உரிய அனுமதிக்குப் பிறகே கருவலூர் ஊராட்சியில் வழிபாட்டுக்கூடம்திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் கருவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட விக்னேஷ் நகர் குடியிருப்பு பகுதியில், ஊராட்சி அனுமதியில்லாமல் கட்டிடம் அமைப்பதாகவும், அங்கு அரசு அனுமதியின்றி மத வழிபாட்டுக் கூடம் அமைப்பதாகவும், இதனால் வழிபாட்டுக் கூடத்துக்கு மின் இணைப்பு வழங்குதல், கூட்டங்கள் நடத்த தடை செய்ய வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிடப்பட்டது

உரிய அனுமதிக்குப் பிறகே கருவலூர் ஊராட்சியில் வழிபாட்டுக்கூடம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் கருவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட விக்னேஷ் நகர் குடியிருப்பு பகுதியில், ஊராட்சி அனுமதியில்லாமல் கட்டிடம் அமைப்பதாகவும், அங்கு அரசு அனுமதியின்றி மத வழிபாட்டுக் கூடம் அமைப்பதாகவும், இதனால் வழிபாட்டுக் கூடத்துக்கு மின் இணைப்பு வழங்குதல், கூட்டங்கள் நடத்த தடை செய்ய வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிடப்பட்டது. இதுதொடர்பாக, இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. வட்டாட்சியர் ஜெகநாதன் தலைமை வகித்தார். கருவலூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் அருள் உள்ளிட்ட அதிகாரிகளும், மத வழிபாட்டுக் கூடம் வேண்டும் என்போரும், அமைக்க எதிர்ப்பு தெரிவிப்போரும் கலந்துகொண்டனர். உரிய அனுமதி பெற்ற பிறகு கட்டிடம் அமைக்கலாம் என்றும், அரசு அனுமதி பெற்று மத வழிபாட்டுக் கூடம் அமைத்து வழிபாடு நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x