Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

திருப்பூர் ஊராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில், காவல் ஆய்வாளர் கவுசல்யா உள்ளிட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில், கணக்கில் வராத பணம் ரூ.21,710 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x