Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில், சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். வரும் 23-ம்தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கஉள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT