Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

கணினியில் விளையாடியதை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

நெய்வேலி வடக்குத்து காந்தி நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன்பிரிஜேஷ் (13). இவர் மாற்றுக் குடியிருப்பில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரதுதந்தை புகைப்படக் கலைஞர் என்பதால் வீட்டில் கம்ப்யூட்டர் இருந்துள்ளது. நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக பெரியசாமி வெளியே சென்றிருந்தார். இந்நிலை யில், சிறுவன் வீட்டிலிருந்த அறை யில் கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்தது. அவ ரது தாயார் மகனிடம், இடி மின்னல் நேரத்தில் கம்ப்யூட்டரில் விளையாட வேண்டாம் என கண்டித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த அறையை சிறுவன் பிரிஜேஷ் தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தே கமடைந்த பெற்றோர், கதவைத் தட்டியும் அவர் திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் பிரிஜேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்துதகவலறிந்த நெய்வேலிடவுன்ஷிப் போலீஸார் சிறுவனின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x