Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது நிர்வாகவியல் நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது சில கருத்துகளை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு வருகிறார். நேற்று அவர் வெளியிட்ட தகவல்:
புதுச்சேரியில் அடிப்படையில் உள்ள பொது பிரச்சினைகளுக்கு சாதாரண நிலையில் தீர்வு காணாததால், பின்னர் அது சேதமாக உருவாகிறது. தொடக்கத்தி லேயே அதை சரி செய்தால் இச் சேதம் தடுக்கப்படும்.
உதாரணமாக உயரமானமரக்கிளைகளை மழைக்காலத் துக்கு முன்பு சரி செய்ய வேண்டும். தீயணைப்புத்துறை உயரமான ஏணிகளை வைத்துள்ளது. தேவை யான துறையினர் அவர்களை நாடுவதில்லை. இதுபோன்ற விஷ யங்களால் பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது.
இதுபோன்ற அடிப்படை பிரச்சினைகளைத் திறந்த தகவல் தொடர்புவிவரங்களில் சேர்க்க குறிப்பிட் டுள்ளேன். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய விஷயத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப் படுத்த குறைபாடு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். அடுத்த முறை சிறப்பாக செய்ய வேண்டும் என எச்சரித்து, பணிகளை செய்யஇது பயன்படும். அதேபோல் கூடு தல் முயற்சியுடன் குறைகளுக்கு தீர்வு காணும் அதிகாரி நேரில் அழைக்கப்பட்டு, பாராட்டப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT