Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
ராஜபாளையம் செட்டியார்பட்டி பேரூராட்சியில் தெய்வக்கனி என்பவரது வீடு மற்றும் தேவதானம் பகுதியில் ராஜேந்திரன்- பாக்கியத்தாய் வீடு நேற்று முன்தினம் அதிகாலை பெய்த மழையால் இடிந்து விழுந்தன.
இதையறிந்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றியத் தலைவர் சிங்கராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்டோரின் வீடுகளைப் பார்வையிட்டு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர். வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொலைபேசியில் வலியுறுத்தினார். அதற்கு, மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT