Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
காரைக்குடி அருகே முதியவருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
காரைக்குடி அருகே வடகுடி ஊராட்சி மணச்சை கிராமத்தில் 70 வயது முதியவருக்கு 10 நாட்களாகத் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் எலிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணச்சை கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த்ராஜ் தலைமையிலான சுகாதாரத்துறையினர் முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருப்பதி ராஜன், தர், ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் உள்ளாட்சி அமைப்பினர் தெருக்கள் முழுவதும் குப்பைகளை அகற்றி குளோரின் பவுடரைத் தெளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT