Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

தமிழக படகுகளை மீட்காத மத்திய அரசை கண்டித்து பாம்பன் கடலில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நாட்டுப் படகுகளை மீட்டுத் தராத மத்திய அரசைக் கண்டித்து, பாம்பன் கடலில் இறங்கி நேற்று மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்த 121 தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க, அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மற்றும் நம்புதாளையைச் சேர்ந்த 19 நாட்டுப்படகுகளும் அடங்கும்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 19 நாட்டுப்படகுகளை மீட்டுத்தரத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், படகுகளை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு மாற்றுப் படகுகள் வழங்கக் கோரியும், கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக பாம்பன் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இ.ஜஸ்டின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக் கப்பட்ட 19 நாட்டுப் படகுகளுக்கும் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திரளான மீனவப் பெண்களும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x