Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

காளையார்கோவில் அருகே தொடர் மழையால் 3 கிராமங்கள் துண்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சூசையப்பர் பட்டணத்தில் இருந்து காட்டாத்தி, பள்ளி தம்பம், வேம்பனி வழியாக உருவாட்டி செல்வதற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இச்சாலையைச் சீரமைக்காததால் காட்டாத்தி, பள்ளிதம்பம் இடையே பல மீட்டருக்கு சாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் 2 நாட்களாக பெய்த மழையால் சாலை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் உருவாட்டி, வேம்பனி, பள்ளிதம்பம் கிராம மக்கள் சூசையப்பர்பட்டினம் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இச் சாலையை விரைவாகச் சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x