Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

நெற் பயிரில் நல்ல மகசூல் கிடைக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

மழையால் வயல்களில் தேங்கியுள்ள நீரால் ஏற்படும் பாதிப்பைத் தடுத்து நெற்பயிரில் தகுந்த மகசூல் கிடைக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் மழை பயிர்களுக்கு உகந்ததாக உள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதன் காரணமாக நெற் பயிரின் வேர்களில் சுவாசிப்புத் திறன் மற்றும் பயிர்களுக்குத் தேவையான சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைச் சரிசெய்ய இலைவழி மூலமாகத் தேவையான நுண்ணூட்ட மற்றும் தழைச்சத்து உடனடியாக இடுவது அவசியமாகும். ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ ஜிங் சல்பேட் மற்றும் இரண்டு கிலோ யூரியா ஆகியவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்குக் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். அதன்மூலம் பயிர்கள் உடனடியாக வளர்ச்சியடைந்து சத்துக் குறைபாடின்றி மகசூல் கிடைக்கும். எனவே, நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் இந்தத் தொழில்நுட்பத்தைப் தவறாமல் பின்பற்ற வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் க.குணபாலன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x