Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு உள் ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தின் 18 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர தமிழக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு 7.5 சதவீத உள் இட ஒதுகீட்டை நடப்பு ஆண்டு முதல் தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்புக்கான நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ, மாணவியரில் 15 பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்வாகினர். 2-ம் நாள் கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 3 மாணவ, மாணவியர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர தேர்வாகினர். நடப்பு ஆண்டில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 மாணவ, மாணவியர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 3 மாணவ,மாணவியர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்து மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT