Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மாங்குடியைச் சேர்ந்தவர் பி.கருப்பையா(66). இவரை, 2019-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சத்யா, குற்றஞ்சாட்டப்பட்ட கருப்பையாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x