Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
கும்பகோணம் நகராட்சி அதி காரிகள், அனைத்து தொழில் வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் பிரேமா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையர் லட்சுமி பேசியது: தற்போது கரோனா பரவல் குறைந்திருந்தாலும், தொடர்ந்து தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு விதிமுறைகளை அனைத்து வியாபார நிறுவனங்களும் எந்தவித தொய்வும் இன்றி தொடர்ந்து கட்டாயமாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை சுற்றுக் கண்காணிப்பு குழுவின் மூலம் ஆய்வு செய்து விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு செயலாளர் சத்தியநாராயணன், துணை நிர்வாகிகள் வேதம்முரளி, கியாசுதீன், ஆண்டாள் முரளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT