Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

கன்னியாகுமரி அருகே மதுக்கடையில் திருட்டு முயற்சி

கன்னியாகுமரி அருகே சோட்டப்பணிக்கன் தேரிவிளை யில் உள்ள மதுக்கடையின் ஷட்டர் நேற்று காலை துளையிடப்பட்டிருந்தது. தென்தாமரைகுளம் போலீஸார் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் கொள்ளையர் புகுந்து, அங்குள்ள கேமராவை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. மேலும் ஷட்டரில் துளைபோட்டு உள்ளே புகுந்தவர்கள் அங்கு பட்டறையை திறந்து பணத்தை திருட முயன்றுள்ளனர். ஆனால், 20 ரூபாய் மட்டும் இருந்ததால் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். மதுபாட்டில்கள் திருடப்படவில்லை. தென்தாமரை குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x