Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் துணை மின் நிலையத்தில் மின்வாரிய கிழக்கு பிரிவு அலுவலகம் செயல்பட்டது. இந்த அலுவலகம், தச்சாம்பாடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள துணை மின் நிலைய வளாகத்துக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முடையூர், செவரப்பூண்டி, நாச்சாபுரம், செய்யானந்தல், பக்கா குடிசை, தச்சாம்பாடி, பரிக்கல்பட்டு, ராஜமாபுரம், கிழக்கு மேடு, கரிப்பூர், தொழுப்பேடு, சென்னானந்தல், நம்பேடு மற்றும் தேவிமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் தச்சாம்பாடி துணை மின் நிலைய வளாகத்தில் செயல்பட தொடங்கியுள்ள மின்வாரிய அலுவலகத்தை அணுகவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT