Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப் கார் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவு

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் ரோப் கார் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தர விட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிராகர வளர்ச்சிப் பணிகள், ரோப் கார் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். தற்போது, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதுடன் பக்தர்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, சோளிங்கர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.சம்பத், சார் ஆட்சியர் இளம்பகவத், அறநிலைய துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ரமணி, சோளிங்கர் வட்டாட்சியர் ரேவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சோளிங்கர் தேர்வுநிலை பேரூராட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் சோளிங்கர் பெரிய ஏரியில் திறந்தவெளி கிணறு அமைத்து கொண்டபாளையம் பகுதியில் உள்ள 4 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முடியும் நிலையில் உள்ள இந்தப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மேலும், சோளிங்கர் பேரூராட்சி யில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டும் பணிகள் நிலுவையில் இருப்பது குறித்தும் அந்தப் பணிகள் விரைவில் தொடங்குவது குறித்தும் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x