Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM
தாம்பரம் மின்கோட்டத்தில் சுமார் ரூ.5 கோடி மின் கட்டணம் நிலுவையில் உள்ளதாக கணக்கிடப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று வசூலில் ஈடுபட்டனர். கட்டணம் செலுத்தாத வீடுகளில் மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து பொதுமக்கள் பலர் முன்வந்து மின் கட்டணத்தைச் செலுத்தினர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீடுவீடாக ஆய்வு மேற்கொண்டு மின் இணைப்பு துண்டிக்கும் பணி நடைபெற்றது. இதனால்சிலர் தாமாக முன்வந்து மின் கட்டணத்தை செலுத்தினர். ஒரேநாளில் ரூ.75 லட்சத்துக்கும் மேல் நிலுவை கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT