Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் குன்னப்பட்டு கிராமத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் மற்றும் சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குழந்தைகள் நல்ல குழும தலைவர் ராமச்சந்திரன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், இருளர் மக்கள் மற்றும் சிறுவர்களுக்கு கரோனா தொற்று குறித்தும், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தி சானிடைசர், முகக்கவசம் வழங்கப்பட்டன.
இதையடுத்து, பள்ளி சிறுவர்களுக்கு கல்வி உபகரணங்களான எழுது பொருட்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில், சைல்டு லைன் உறுப்பினர்கள், சிறுவர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT