Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM
ஒரே டெண்டரில் 400-க்கும் மேற்பட்ட பொருட்கள் வாங்கியது தொடர்பான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி தர மறுத்து, உள் துறைக்கு அனுப்பியுள்ளார். துறைசார்ந்த விசாரணைக்கும் பரிந் துரைத்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று வாட்ஸ் அப்பில் தெரிவித்த தகவல்:
புதுச்சேரி ராஜ்நிவாஸுக்கு ஒரு கோப்பு வந்தது. அதில் நிதி விதிகளின்படி ஒரே டெண் டரில் 400-க்கும் மேற்பட்ட பொருட்கள் உரிய செயல்முறை இல்லாமல் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இப்பொருட் கள் அனைத்தும் ஒற்றை டெண்டரில் வாங்கப்பட்டுள்ளது. அங்கீ கரிக்கப்பட்ட கொள்முதல் குழு வின் அனுமதியுடன் ஆளுநர் மாளிகையின் ஒப்புதலும் இதற்கு தேவை.
பொருட்கள் வாங்கியது தொடர்பான இக்கோப்பானது தலைமைச்செயலருக்குக்கூட அனுப்பப்பட வில்லை. இது ஒரு அமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலகம் இந்த சட்டவிரோத செயலை ஏற்கவில்லை. இக்கோப்பை அங்கீகரிக்க வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எந்த ஒழுங்கற்ற செயலை யும் முறைப்படுத்த முடியாது. அதனால் இக்கோப்பினை மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளேன்.
அத்துடன் இப்பொருட்கள் வாங்கியதில் ஒரு குழுவாக செயல்பட்டுள்ளதால் துறைசார்ந்த விசாரணை நடத்தவும் உள்துறைக்கு பரிந்துரைத் துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT