Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன் பட்டியில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்த்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாலாஜி, மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக மின்வாரியத்தில் ஓராண்டுக்கும் மேலாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்உள்ளன. இப்பணிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மின்வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட பத்தாயிரம் கேங்மேன்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தாலுகா தலைவர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x