Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

200 லி. மண்ணெண்ணெய் பதுக்கியவர் கைது

ராமேசுவரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). இவர் ரேஷன் மண்ணெண்ணெயை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக தனது வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். இதை அறிந்த ராமேசுவரம் இன்ஸ்பெக்டர் சதிஷ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் மண்ணெண்ணெய் பேரல்களைப் பறிமுதல் செய்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். மேலும் இவருக்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்த வள்ளி, செல்வி ஆகிய இரண்டு பெண்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x