Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

திமுக ஆட்சி அமைய உறுதி ஏற்போம் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேச்சு

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வத்தலகுண்டு, நிலக்கோட்டை, செம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி. ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். வத்தலகுண்டு நகரில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குச் சாவடி முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி பேசும்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்களிடம் ஆசை ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டு திமுக ஆட்சி அமைய சூளுரைப்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x