Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

வில்லிபுத்தூர் அருகே தொடர் மழையால்தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின

வில்லிபுத்தூர்

வில்லிபுத்தூர், மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோயில், மல்லி, வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கான்சாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழை காரணமாக வில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டி-பிளவக்கல் அணை செல்லும் சாலையில் பட்டுப்பூச்சி, ரகுமத் நகர் பகுதியில் உள்ள இரண்டு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x