Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

செம்பட்டி அருகே லாரி மீது பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருந்து மினி லாரியில் மளிகைப் பொருட்களுடன் சமையல் தொழிலாளர்கள் 5 பேர் வத்தலகுண்டு நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். நேற்று இரவு புதுகோடங்கிபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, செம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மோதியது. இதில், மினிலாரி யில் இருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவி(45), முருகன்(40) உயிரிழந்தனர். மினி லாரி ஓட்டுநர் மற்றும் 3 சமையல தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து செம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x