Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

சதாப்தி சிறப்பு விரைவு ரயில் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறுத்தம்

சேலம்

சேலம் வழியாக இயக்கப்பட்டு வரும் சென்னை-கோவை சதாப்தி சிறப்பு விரைவு ரயில் பிப்ரவரி 2-ம் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-கோவை (எண்-06027), கோவை- சென்னை சென்ட்ரல் (எண்-06028)என இருமார்கத்தில் சதாப்தி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சதாப்தி விரைவு ரயிலில், பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எனவே, சதாப்தி விரைவு ரயில் இயக்கம் இருமார்க்கத்திலும் வரும் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 1-ம் தேதி செவ்வாய் கிழமை என்பதால் ரயில் இயக்கம் இரு மார்க்கத்திலும் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x