Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு

நாமக்கல்: நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மோகனூர் சாலை அழகு நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (42). இவர் கோழிப்பண்ணைகளுக்கு மருந்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தனித்தனி அறைகளில் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் உறங்கியுள்ளார்.

காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் மற்றொரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மாயமாகியிருந்தது. இதுதொடர்பாக அவர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டில் வைத்திருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x