Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
சேலம்: காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,306 கனஅடியாக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 10,861 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 11,306 அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நேற்று முன்தினம் 95.47 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 96.15 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 59.96 டிஎம்சி-யாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT