Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் அந்தந்த எல்லைக்குட்பட்ட பொதுமக்களின் குறைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாமில் மொத்தம் 151 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 107 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT