Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

கோயில் பூட்டை உடைத்து நவக்கிரக சிலைகளை சேதப்படுத்திய 2 பேர் கைது

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே குப்பாங்குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பழமையான செல்வ விநாயகர் கோயிலை அக்கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை கோயில் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதுதொடர்பாக, கோயில் நிர்வாகி சக்கரவர்த்தி கொடுத்த புகாரின்பேரில், நாச்சியார்கோவில் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, கோயிலில் நவக்கிரக சன்னதியில் இருந்த 4 சிலைகள் கீழே தள்ளிவிடப்பட்டு, சேதமடைந்திருந்தன.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த விஜய்(32), கதிரவன்(48) உள்ளிட்ட 4 பேர், நேற்று முன்தினம் கோயில் நடை மூடிய பிறகு, மதுபோதையில் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து விஜய், கதிரவன் ஆகியோரை கைது செய்த போலீஸார், தப்பியோடிய மற்ற இருவரை தேடி வருகின்றனர். மேலும், கோயிலில் வேறு ஏதேனும் பணம், நகைகள் திருடு போய் உள்ளனவா என விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x