Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

நெல்லை ரயில் நிலையத்தில் செல்பி எடுத்த மாணவர் மரணம்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் செல்பி எடுத்த மாணவர் ம.ஜானேஸ்வர் (15) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருநெல்வேலி அருகே தாழையூத்து சர்ச் தெருவை சேர்ந்த மகேஷ்குமார் மகன் ஜானேஸ்வர். திருநெல்வேலியிலுள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு நேற்று வந்த இவர் 4-வது பிளாட்பாரத்தில் சரக்கு ரயிலில் இருந்து அரிசி மூட்டைகள் இறக்குவதை வேடிக்கை பார்த்தார். சரக்கு ரயில் பெட்டிமீது ஏறி செல்பி எடுத்ததாக தெரிகிறது. இதில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்திப்பு ரயில்வே போலீஸார் விசாரிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x