Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

குழித்துறை நகராட்சி கடைகளில் திருட்டு

நாகர்கோவில்: குழித்துறை வெட்டுவெந்நியில் நகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள ஓட்டல், காய்கறிக் கடை, பிசியோதெரபி மையம் ஆகியவற்றின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பணம், பொருட்கள் திருடப்பட்டிருந்தன. நேற்று காலை கடைகளை திறக்க வந்த வியாபாரிகள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து மார்த்தாண்டம் போலீஸில் புகார் செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x