Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
கோவில்பட்டி: காஷ்மீரில் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.
கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி(34). கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் நாயக் பதவி வகித்து வந்துள்ளார். காஷ்மீரில் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி நேற்று காலை அங்கு நடைபெற்ற விபத்தில் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த தகவல் ராணுவத் தரப்பில் இருந்து கருப்பசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா (7), வைஷ்ணவி(5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர். 2 மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கருப்பசாமி கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்கு திரும்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT