Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

வீரதீர விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வீரதீர செயல்புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு தகுதியான வர்கள் விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வீர தீர செயல்புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், மாநில அரசின் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதியான 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளிடம் இருந்து இம்மாதம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் வாயிலாக உரியமுன்மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், பி-பிளாக், சத்து வாச்சாரி, வேலூர் என்ற முகவரி யில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x