Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

வேலூர் தொரப்பாடி எழில்நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (52). அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த12-ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றவர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x