Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

தனியார் பள்ளிகள் 35% கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி

மாணவர்களிடம் இருந்து பெற வேண்டிய மீதமுள்ள 35 சதவீத கல்விக் கட்டணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 75 சதவீத கட்டணம் வசூலிக்கவும் அதில் 40 சதவீதத்தை செப்.30-க்குள் வசூலிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:

ஏற்கெனவே 40 சதவீத கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலை யில், மீதமுள்ள 35 சதவீத கட் டணத்தை வரும் பிப்ரவரிக்குள் தனியார் பள்ளிகள் வசூலித்துக் கொள்ளலாம். இதனை தவணை முறையில் வசூலிப்பது குறித்து பள்ளிகள் முடிவு செய்யலாம். முதல் 40 சதவீத கட்டணத்தை செலுத்தாத மாணவர்கள் 2019-20ம் கல்வியாண்டில் செலுத்த வேண்டிய 35 சதவீத கட்டணத்தயும் சேர்த்து செலுத்த வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட் டணத்தை வசூலித்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிரான புகார்கள் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நவ. 27-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும். இவ் வாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் மார்ச் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x