Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4.5 லட்சத்துக்கும் கீழாக குறைந்தது

நாடு முழுவதும் நேற்று 38,617 பேருக்கு கரோனா வைரஸ்தொற்று ஏற்பட்டது. இதன்மூலம்வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,12,907 ஆக அதிகரித்துள்ளது. இதில்83,35,109 பேர் குணமடைந் துள்ளனர்.

மருத்துவமனைகளில் 4,46,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்றைவிட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4.5 லட்சத்துக்கும் கீழாக குறைந்திருக்கிறது. ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,30,993 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 2,732 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,52,509 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,23,503 பேர் குணமடைந்துள்ளனர். 82,904 பேர் சிகிச்சையில் உள்ளனர். 46,102 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 1,336 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,64,140 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 8,27,241 பேர் குணமடைந்துள்ளனர். 25,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் புதிதாக 1,395பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,56,159 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில்8,32,284 பேர் குணமடைந்துள்ள னர். 16,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் நேற்று 6,419 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு5,41,919 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,68,460 பேர் குணமடைந்துள்ளனர். 69,394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் 1,420 பேர், டெல்லியில் 6,396 பேர், மேற்குவங்கத்தில் 3,654 பேர்,ஒடிசாவில் 644 பேர், தெலங்கானாவில் 948 பேர், ராஜஸ்தானில் 2,194 பேர், பிஹாரில் 601 பேர், சத்தீஸ்கரில் 1,721 பேர், அசாமில் 242 பேர், ஹரியாணாவில் 2,450 பேர், குஜராத்தில் 1,125 பேர், மத்திய பிரதேசத்தில் 922 பேர், பஞ்சாபில் 515 பேர், ஜார்க்கண்டில் 261 பேர், காஷ்மீரில் 572 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x