Published : 16 Nov 2020 03:13 AM
Last Updated : 16 Nov 2020 03:13 AM
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவ. 13, 14, 15-ம் தேதிகளில் 18 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த பட்டாசு கழிவுகளை கும்மிடிபூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அபாய கரமானகழிவுகளை அழிக்கும் தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை கூட்டமைப்பு நிறுவனத்தில்தான்அழிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சென்னையில் சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள்கும்மிடிபூண்டிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இப்பணியில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரம் பணியாளர்கள் சுழற்சிமுறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT